16 23
ஏனையவை

உப்புத்தட்டுப்பாட்டுக்கான தீர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Share

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டுக்கு இன்றுடன் தீர்வு கிடைக்கும் என்று அரசாங்கத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய உப்புக்கூட்டுத்தாபனம் இறக்குமதி செய்யும் உப்பு இன்றைய தினம் கிடைக்கப்பெறும் சாத்தியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்து முதற்கட்டமாக 2800 மெட்ரிக் தொன் உப்பு தேசிய உப்புக் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

கடந்த 21ஆம் திகதி நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட குறித்த உப்பு கப்பலானது, பல்வேறு காரணிகளால் தாமதமாகி இன்றைய தினம் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனையடுத்து நாட்டில் தற்போதைக்கு நிலவும் உப்புத்தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...