1 44
ஏனையவை

மக்களின் காவலனாக இருப்பேன் : கோடீஸ்வரன் உறுதி

Share

மக்களின் காவலனாக இருப்பேன் : கோடீஸ்வரன் உறுதி

வலுவிழந்து இருக்கின்ற மக்களின் காவலனாக இருப்பேன் என அம்பாறை (Ampara) மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசு கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கவிந்திரன் கோடீஸ்வரன் (Kaveendiran Kodeeswaran) தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதியாக தெரிவாகிய பின்னர் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று (15) இரவு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு கருத்து வெளியிட்ட அவர், ”அம்பாறை மாவட்ட தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதியாக இலங்கைத் தமிழசு கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான என்னை தெரிவு செய்த மக்களுக்கு நன்றிகள்.

நாடாளுமன்ற தேர்தலில் பல சவால்களுக்கு மத்தியில் இலங்கைத் தமிழரசு கட்சி சார்பாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு பெரும் பாடுபட்டுள்ளதை நான் அறிவேன்.

இந்தத் தேர்தல் பிரசாரத்துக்கு மக்கள் வழங்கிய பேராதரவுக்கு மிக்க நன்றிகள். எனவே வலுவிழந்து இருக்கின்ற மக்களின் காவலனாக நான் தொடர்ந்தும் இருப்பேன்” என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...