1 44
ஏனையவை

மக்களின் காவலனாக இருப்பேன் : கோடீஸ்வரன் உறுதி

Share

மக்களின் காவலனாக இருப்பேன் : கோடீஸ்வரன் உறுதி

வலுவிழந்து இருக்கின்ற மக்களின் காவலனாக இருப்பேன் என அம்பாறை (Ampara) மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசு கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கவிந்திரன் கோடீஸ்வரன் (Kaveendiran Kodeeswaran) தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதியாக தெரிவாகிய பின்னர் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று (15) இரவு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு கருத்து வெளியிட்ட அவர், ”அம்பாறை மாவட்ட தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதியாக இலங்கைத் தமிழசு கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான என்னை தெரிவு செய்த மக்களுக்கு நன்றிகள்.

நாடாளுமன்ற தேர்தலில் பல சவால்களுக்கு மத்தியில் இலங்கைத் தமிழரசு கட்சி சார்பாக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு பெரும் பாடுபட்டுள்ளதை நான் அறிவேன்.

இந்தத் தேர்தல் பிரசாரத்துக்கு மக்கள் வழங்கிய பேராதரவுக்கு மிக்க நன்றிகள். எனவே வலுவிழந்து இருக்கின்ற மக்களின் காவலனாக நான் தொடர்ந்தும் இருப்பேன்” என தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...

1742213297 ganemulla sanjeewa 6
ஏனையவை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேக நபர்கள் டிசம்பர் 5 வரை விளக்கமறியல் நீட்டிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் 5ஆம்...

thumbs b c 5027e373e0f532f509cd40063f3ea6cb
ஏனையவை

லிபியா போலல்லாமல், இலங்கையின் பழமையான ஜனநாயகத்தைப் பேண வேண்டும்” – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தல்!

இலங்கை ஆசியாவின் மிகப் பழமையான ஜனநாயகம் மிக்க நாடு என்றும், லிபியா அல்லது தற்போது அமைதியின்மையை...

2024 11 25 Pudukkudiyiruppu MV 2
ஏனையவை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு: 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வரும்...