ஏனையவைசினிமாசெய்திகள்

பரபரப்பை கிளப்பிய விஜயலட்சுமி புகார்!

Share

பரபரப்பை கிளப்பிய விஜயலட்சுமி புகார்!

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் ஒன்றை அளித்தார்.

அதில், சீமான் திருமணம் செய்வதாக கூறி காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், கணவன்- மனைவி போல் குடும்பம் நடத்திவிட்டு தன்னை பயன்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், தன்னிடம் பணம், நகையை பறித்து மோசடி செய்ததாகவும், 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தீவிரமான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பல்வேறு விசாரணைக்கு பின்னர் மகப்பேறு மருத்துவர்கள் சோதனை நடத்தினர்.

விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்த போது கையெழுத்து போட்டது யார்? என்று விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி புகார் குறித்து விசாரணை நடத்த ஆஜராகும்படி சீமானுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இன்று காலை 10:30 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...