24 66a45173ca85c
ஏனையவை

சிறைச்சாலையில் குவியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்: வெளியான காரணம்

Share

சிறைச்சாலையில் குவியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்: வெளியான காரணம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவின் நலனை விசாரிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அஜித் பிரசன்னவின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக அண்மைய நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, சரத் வீரசேகர, கனக ஹேரத், ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, சம்பத் அத்துகோரள, மொஹான் சில்வா மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் அவரை சந்தித்துள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அஜித் பிரசன்னவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.

அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 4 வருட கடூழிய சிறைத்தண்டனையும்,ரூ. 3 இலட்சம் அபராதத்தொகையும், அபராதத்தை செலுத்த தவறும்பட்சத்தில் மேலும் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் அஜித் பிரசன்ன மற்றும் 2 கடற்படை புலனாய்வு அதிகாரிகள், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி சாட்சிகளை மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...