24 66a45173ca85c
ஏனையவை

சிறைச்சாலையில் குவியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்: வெளியான காரணம்

Share

சிறைச்சாலையில் குவியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்: வெளியான காரணம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவின் நலனை விசாரிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அஜித் பிரசன்னவின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக அண்மைய நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, சரத் வீரசேகர, கனக ஹேரத், ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, சம்பத் அத்துகோரள, மொஹான் சில்வா மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் அவரை சந்தித்துள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அஜித் பிரசன்னவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.

அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 4 வருட கடூழிய சிறைத்தண்டனையும்,ரூ. 3 இலட்சம் அபராதத்தொகையும், அபராதத்தை செலுத்த தவறும்பட்சத்தில் மேலும் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் அஜித் பிரசன்ன மற்றும் 2 கடற்படை புலனாய்வு அதிகாரிகள், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி சாட்சிகளை மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...