3 36
ஏனையவை

வலுக்கும் போர் பதற்றம் : உக்ரைன் தலைநகரிலுள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைக்கும் ரஷ்யா

Share

வலுக்கும் போர் பதற்றம் : உக்ரைன் தலைநகரிலுள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைக்கும் ரஷ்யா

உக்ரைன்(ukraine) ரஷ்ய(russia) போர் ஆயிரம் நாள் கடந்தபோதிலும் எவ்வித மாற்றத்தையும் காணவில்லை.மாறாக போரும் அழிவுகளும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

வடகொரிய(north korea) படையினர் சுமார் 10 ஆயிரம் பேர் உக்ரைனுக்கு எதிராக போரிட ரஷ்யாவிற்கு சென்றது அமெரிக்காவை சினம் கொள்ள வைத்துள்ளது.

இதனையடுத்து அமெரிக்க(us) ஜனாதிபதி பைடன்(joe biden) ரஷ்யாவிற்குள் நீண்டதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதியளித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் அனுமதியை அடுத்து உக்ரைன் எட்டு ஏவுகணைகளை வீசி ரஷ்ய படைநிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் கடுப்பான ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலுள்ள அமெரிக்க தூதரக தலைமையகம் மீது எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதனையடுத்து தூதரகம் இன்று(நவ. 20) மூடப்பட்டுள்ளது. ரஷ்ய படைகள் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தப்போவதாக தகவல் வெளியானதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தூதரகம் மூடப்பட்டுள்ளது.

மேலும், அவ்வாறு தாக்குதல்கள் நிகழ்த்தப்படும்போது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தற்காத்துக்கொள்ள ஏதுவாக, அபாய ஒலி எழுப்பப்படும், அவ்வாறு சைரன் சத்தம் கேட்டால் கீவ் நகரிலுள்ள அமெரிக்கர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்களை தற்காத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...