24 65be1c8500f28
உலகம்ஏனையவைசெய்திகள்

எங்களுடன் வைத்துக்கொண்டால்.., ஈராக், சிரியாவின் 85 தளங்களில் அமெரிக்கா பதிலடி தாக்குதல்

Share

எங்களுடன் வைத்துக்கொண்டால்.., ஈராக், சிரியாவின் 85 தளங்களில் அமெரிக்கா பதிலடி தாக்குதல்

ஜோர்டானில் உள்ள தங்கள் முகாம் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆதரவுடன் 85க்கும் மேற்பட்ட போராளித் தளங்களை அமெரிக்க போர் விமானங்கள் குறிவைத்தன. இதன் விளைவாக சிரியாவில் 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்களுக்கு கட்டணம் பலமடங்கு உயர்வு., ஏப்ரல் 1 முதல் அமுல்
புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்களுக்கு கட்டணம் பலமடங்கு உயர்வு., ஏப்ரல் 1 முதல் அமுல்
வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் இந்தத் தாக்குதல்கள் நடந்தன.

முக்கிய கட்டளைக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உளவுத்துறை மையங்கள், ரொக்கெட்டுகள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், வெடிமருந்து சேமிப்பு கிடங்குகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு சொந்தமான தளவாட வசதிகள் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோர்டானில் ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 40 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு அறிக்கையில், அமெரிக்கர்களுக்கு யாராவது தீங்கு விளைவித்தால், அவர்கள் தக்க பதிலடி பெறுவார்கள் என்று கூறினார்.

 

Share
தொடர்புடையது
Untitled 78
விளையாட்டுசெய்திகள்

எஃப்.ஏ கிண்ணத்திலிருந்து ஆர்சனல் வெளியேற்றம்: அரையிறுதிக்கு முன்னேறியது மன்செஸ்டர் சிற்றி!

இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க (FA Cup) சவால் கிண்ணத் தொடரின் பரபரப்பான காலிறுதிப் போட்டியில், பலம்...

Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...