24 65be1c8500f28
உலகம்ஏனையவைசெய்திகள்

எங்களுடன் வைத்துக்கொண்டால்.., ஈராக், சிரியாவின் 85 தளங்களில் அமெரிக்கா பதிலடி தாக்குதல்

Share

எங்களுடன் வைத்துக்கொண்டால்.., ஈராக், சிரியாவின் 85 தளங்களில் அமெரிக்கா பதிலடி தாக்குதல்

ஜோர்டானில் உள்ள தங்கள் முகாம் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆதரவுடன் 85க்கும் மேற்பட்ட போராளித் தளங்களை அமெரிக்க போர் விமானங்கள் குறிவைத்தன. இதன் விளைவாக சிரியாவில் 18 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்களுக்கு கட்டணம் பலமடங்கு உயர்வு., ஏப்ரல் 1 முதல் அமுல்
புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்களுக்கு கட்டணம் பலமடங்கு உயர்வு., ஏப்ரல் 1 முதல் அமுல்
வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் இந்தத் தாக்குதல்கள் நடந்தன.

முக்கிய கட்டளைக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உளவுத்துறை மையங்கள், ரொக்கெட்டுகள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், வெடிமருந்து சேமிப்பு கிடங்குகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு சொந்தமான தளவாட வசதிகள் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோர்டானில் ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்கள் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 40 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு அறிக்கையில், அமெரிக்கர்களுக்கு யாராவது தீங்கு விளைவித்தால், அவர்கள் தக்க பதிலடி பெறுவார்கள் என்று கூறினார்.

 

Share
தொடர்புடையது
5 1
உலகம்செய்திகள்

காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்

காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட...

4 1
இலங்கைசெய்திகள்

செம்மணியில் கொடூரமாக கொன்று புதைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்: அரசு தரப்பின் அதிரடி அறிவிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் சார்பில்...

1
உலகம்செய்திகள்

செம்மணி மனித புதைகுழி விவகாரம் : கனடாவில் இருந்து வந்த கோரிக்கை

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும், பொறுப்புக்கூறல்...

3 1
உலகம்செய்திகள்

செம்மணி விவகாரத்திற்கு சர்வதேச விசாரணை வேண்டும்.. பிரித்தானிய எம்பி கோரிக்கை

கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய...