tamilni 199 scaled
உலகம்ஏனையவைசெய்திகள்

பிக் பாஸில் தனது டேலண்டை காட்டிய கேமராமேன்!

Share

பிக் பாஸ் சீசன் 7 இன் டைட்டில் வின்னர் யார் என்பதை இன்னும் இரண்டு நாட்களில் அறிந்து விடலாம். ஆனால் அது வரையில் டைட்டில் வின்னர் யார் என்பது தொடர்பில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியவாறே உள்ளது.

இந்த நிலையில், ‘ஒரு ஹீரோ எப்படி இருக்க வேண்டும்’ என்று பிக் பாஸ் வீட்டில் உள்ள மாயா, பூர்ணிமாவுடன் கதைத்துக் கொண்டு இருக்க, அதனை மிகவும் புத்திசாலித்தனமாக அர்ச்சனா பெயருள்ள இடத்தை சுட்டிக்காட்டி உள்ளார் கேமரா மேன். தற்போது குறித்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் பழைய போட்டியாளர்கள் வந்த நிலையில், பூர்ணிமாவும் மாயாவும் மீண்டும் கைகோர்த்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், பூர்ணிமாவும் மாயாவும் தனியாக பேசிக் கொண்டிருக்கும் போது, தனக்கு ஏன் ஓட்டு போட வேண்டும்? என்று மாயா புத்திசாலித்தனமாக பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதாவது, ஒரு திரைப்படம் என்றால் அதில் கண்டிப்பாக ஒரு ஹீரோ இருப்பார். அந்த ஹீரோ யாராக இருக்க வேண்டும் என்றால் ஒரு இம்பேக்ட் கிரியேட்டர் பண்றவராக இருக்க வேண்டும். எனக்கு ஓட்டு போட வேண்டும் என்று நான் சொல்லல ஆனா ஒரு ஹீரோவுக்கு ஓட்டு போடுங்க என்று தான் சொன்னேன். என்று பூர்ணிமா விட மாயா சொல்கிறார். அந்த நேரத்தில், அர்ச்சனா பேர் உள்ள ஒரு பலகையை காண்பிக்கின்றது கேமரா.

இதில் என்ன ஹைலைட் என்றால், ‘நீங்கள் ஹீரோவுக்கு ஓட்டு போடுங்கள்’ என்ற மாயா சொல்லும் போது கேமராமேன் அர்ச்சனாவின் பெயரை காண்பித்தது தான். தற்போது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...