ஏனையவை

இந்தியர்களுக்கு காலவரையறையின்றி Visa-Free Entry அறிவித்துள்ள நாடு.!

10 3
Share

இந்தியர்களுக்கு காலவரையறையின்றி Visa-Free Entry அறிவித்துள்ள நாடு.!

தாய்லாந்து, இந்தியப் பயணிகளுக்கான வீசா இல்லாத நுழைவு திட்டத்தை (Visa-Free Entry) காலவரையறையின்றி நீட்டித்துள்ளதாக தாய்லாந்து சுற்றுலாத்துறை (TAT) உறுதிபடுத்தியுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் இந்திய பயணிகள் தாய்லாந்தில் 60 நாட்கள் வரை தங்க அனுமதி பெறுகின்றனர்.

மேலும், 30 நாட்கள் கூடுதலாக தங்க உள்ளூர் குடியுரிமை அலுவலகத்திடம் அனுமதி பெறலாம்.

இதன்மூலம், இந்திய பயணிகள் விசா விண்ணப்ப நெருக்கடிகள் இன்றி தாய்லாந்திற்கு செல்ல முடியும், இதனால் பயண அனுமதிகள் தொடர்பான சிக்கல்களை தவிர்க்கலாம்.

2022 நவம்பர் 10ல் அறிமுகமான இந்த Visa-Free Entry திட்டம் முதலில் 2023 மே 10 வரை மட்டுமே அமுலில் இருந்தது. பின்னர் தற்காலிகமாக 2023 மே 11 முதல் நவம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டது.

ஆனால், இப்போது இத்திட்டத்தை காலவரையறையின்றி நீட்டித்துள்ளதாக தாய்லாந்து சுற்றுலாத்துறை (TAT) தெரிவித்துள்ளது.
விசா இல்லாத பயணம் என்பது பயணிகள் எந்தவொரு விசாவும் பெறாமல் அல்லது வருகை நேரத்தில் முன்கூட்டியே அனுமதி பெறாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதைக் குறிக்கிறது.

பயணத்திற்கான செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இருந்தால் அவர்கள் சர்வதேச விமான நிலையங்களில் குடியுரிமை சோதனை காப்பகத்தில் காட்டினால் போதும்.

இந்திய பயணிகளுக்கு தாய்லாந்து முக்கிய விசா இல்லாத பயண இடங்களில் ஒன்றாக திகழ்கிறது.

2024 முதல் மூன்று மாதங்களில் தாய்லாந்து 9.4 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்றுள்ளது. இதனால் அதன் பொருளாதாரத்திற்கு 454.6 பில்லியன் பாட் ($12.4 பில்லியன்) வருவாய் கிடைத்துள்ளதாக தாய்லாந்து சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2024-ல் மொத்தம் 40 மில்லியன் சுற்றுலா பயணிகளை வரவேற்பதற்கான இலக்குடன் தாய்லாந்து திட்டமிட்டுள்ளது. இதுவரை 1.64 மில்லியன் இந்தியர்கள் தாய்லாந்து சென்றுள்ளனர்.

Share
Related Articles
2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...