19 8
ஏனையவை

சிறி லங்கன் எயார் லைன்ஸிற்கு ஏற்பட்ட பாதிப்பு : பல விமான சேவைகள் இரத்து

Share

சிறி லங்கன் எயார் லைன்ஸிற்கு ஏற்பட்ட பாதிப்பு : பல விமான சேவைகள் இரத்து

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்த மூன்று சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், சில விமானங்கள் தாமதமானதாகவும் விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு விமானமும் அதன் விமான பறப்பை முடித்த பிறகு தொழில்நுட்ப மதிப்பீட்டு சோதனைக்கு உட்படுகிறது என்று அதிகாரி விளக்கினார்.

சில விமானங்களில் தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இந்த செயல்முறை நேரம் எடுக்கும். பாதிக்கப்பட்ட மூன்று விமானங்களும் தொழில்நுட்ப பராமரிப்புக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன, என்றார்.

இதன் காரணமாக இன்று பிற்பகல் இந்தியாவின் (india) சென்னைக்கு (chennai) புறப்படவிருந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-123 மற்றும் சென்னையில் இருந்து இரவு 10:15 மணிக்கு கட்டுநாயக்கவிற்கு வரவிருந்த UL-124 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலதிகமாக, விமானம் UL-196, இந்தியாவின் புது டெல்லியில் (newdelhi) இருந்து கட்டுநாயக்கவை இரவு 10:10 மணிக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அவுஸ்திரேலியாவின் (australia) மெல்போர்னில் இருந்து இரவு 10.20 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தகவல் அளித்துள்ளதுடன், அவர்கள் தமது பயணத்தை அடைய உதவுவதற்காக மாற்று விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...