tamilni 259 scaled
ஏனையவை

நான் ஈழத்தில் கால்பதிக்கவில்லை! முரளிதரன்

Share

நான் ஈழத்தில் கால்பதிக்கவில்லை! முரளிதரன்

தான் மலையகத்தில் வாழ்ந்த மலையகத்தவர் என்பதனால் ‘800’ திரைப்படம் முற்றுமுழுதாக மலையக தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றினை மாத்திரமே உள்ளடக்கியுள்ளதே தவிர தான் ஈழத்தில் கால் பதிக்கவில்லை என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

‘800’ திரைப்படத்தில் ஈழத்தமிழர்களின் உள்ளடக்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது பெற்றோர் மலையகத்தினை சேர்ந்தவர்கள். நான் மலையகத்தில் பிறந்து வாழ்ந்த மலையகத்தவர் தான்.நான் ஈழத்தில் கால்பதிக்கவில்லை. ஈழத்தில் நடந்தவற்றினை நான் பார்க்கவில்லை. ஈழத்திற்கு சாதாரண மனிதர்களை போல சுற்றுலாவிற்கு மாத்திரமே சென்று வந்திருக்கின்றேன்.

எனவே நான் பார்த்த எனது வாழ்க்கையில் இடம்பெற்ற விடயங்களை மாத்திரமே 800 திரைப்படத்தில் உள்ளடக்கியுள்ளோம்.

யுத்தம் என்பது அரசியல் சாதாரண கிரிக்கெட் வீரரான என்னால் அரசியல் தொடர்பில் கருத்து தெரிவிக்க முடியாது. நான் கருத்து தெரிவிப்பதினால் எதுவும் மாறப்போவதில்லை. நான் எனது குடும்பம், தொழில், வாழ்க்கை என்று வாழும் சாதாரண மனிதன் என்றும் பதிலளித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...

articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...

1742213297 ganemulla sanjeewa 6
ஏனையவை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேக நபர்கள் டிசம்பர் 5 வரை விளக்கமறியல் நீட்டிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் 5ஆம்...