1 18
இலங்கைஏனையவைசெய்திகள்

கனேடிய அரசாங்கத்திடம் சிறீதரன் எம்.பி விடுத்த முக்கிய கோரிக்கை

Share

கனேடிய அரசாங்கத்திடம் சிறீதரன் எம்.பி விடுத்த முக்கிய கோரிக்கை

குற்றவியல் பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விதத்தில் அடுத்த தீர்மானத்தில் தகுந்த தரமுயர்த்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எமது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.

கனேடிய (Canada) வெளிவிகார அமைச்சின் இந்தோ – பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதி அமைச்சர் வெல்டன் எப் (Weldon Epp) உள்ளிட்ட கனேடிய அரசியல் தரப்பினருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்றைய தினம் (19.12.2024) கனடா – ஒட்டாவாவில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் கனேடிய பிரதியமைச்சரிடம் எழுத்துமூல கோரிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையில் , இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் அர்த்தமுள்ளதாகுவதெனில் அதைப் பின்வரும் மூன்று விதமாகப் படிநிலைப்படுத்தப்பட்ட முக்கியத்துவத்தோடும் ஒழுங்கோடும் அணுக வேண்டும் என்பது எமது பார்வையாக உள்ளது.

01) தலையாய சர்வதேசக் குற்றமான இன அழிப்புத் தொடர்பான பொறுப்புக்கூறல்

02) இதர சர்வதேசக் குற்றங்களான போர்க்குற்றங்கள், மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை, வலிந்து காணமலாக்கப்பட்டமை ஆகியவை பற்றிய பொறுப்புக்கூறல்

03) மேற்குறித்த குற்றங்கள் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் பல பத்தாண்டுகளாகத் தீர்க்கப்படாது புரையோடிப்போயிருக்கும் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை, குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் கூட்டாட்சி அரசியலமைப்பொன்றை ஏற்படுத்துவதும் பொறுப்புக்கூறலின் முக்கிய பெறுபேறாக அமையவேண்டும்.

மேற்குறித்த மூன்று முனைகளில் அர்த்தமுள்ளவகையில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதிலும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதிலும் பெருந்தொகையாகப் புலம்பெயர்ந்து ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் முதன்மையான நாடான கனடா நாடானது பின்வரும் வழிகளில் காத்திரமாக உதவவேண்டும் என்று அனைத்து ஈழத்தமிழர் மற்றும் தமிழ் பேசும் மக்கள் சார்பாகவும் வேண்டி நிற்கிறேன். என குறித்த கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அண்மைய அறிக்கையின் (A/u/RC/57/19)I உறுப்புரை 68 உபபிரிவு (a) (b) ஆகியவற்றில் பிரேரித்திருப்பவையும் இங்கு நான் முன்வைக்கும் கோரிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் உசாத்துணையாக அமைந்துள்ளன என்பதையும் தங்களுக்கு எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

இவ்வகையில், அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் தொடர்பாக முன்வைக்கும் கோரிக்கைகளாக,

தலையாய பொறுப்புக்கூறலுக்குரிய தமிழ் இன அழிப்புக் குற்றம் தொடர்பான இலங்கையின் அரச பொறுப்பை விசாரணைக்கு உட்படுத்துமாறு உலக நீதிமன்றை அணுகுதல்.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கையாளப்படும் இதர குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் உயர் கட்டத் தரமுயர்த்தலை எதிர்வரும் 60 ஆம் கூட்டத் தொடரோடு மேற்கொள்ளுதல்

புதிய அரசியலமைப்பு காத்திரமாக மேற்கொள்ளப்படுவதற்குரிய புதுமையான சர்வதேச மத்தியஸ்துவத்தை ஏற்படுத்த ஆவன செய்தல். போன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

சிறந்த வரவேற்பை பெற்ற DNA.. முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அதர்வாவிற்கு நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சிறந்த படமாக...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

நடிகர் ரகுவரனின் மரணத்திற்கு இதுதான் காரணம்.. நடிகர் பப்லு ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன்கள் என பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ரகுவரனின் பெயர் இருக்கும். பாட்ஷா,...