16 10
ஏனையவை

அநுர தமிழ் மக்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்! வைகோ சாடல்

Share

அநுர தமிழ் மக்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்! வைகோ சாடல்

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தமிழ் மக்களுக்கு எதிராக குரல் எழுப்பியவர் என்று தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக (MDMK) நிறுவுனர் வை.கோபால்சாமி (V. Gopalsamy) தெரித்துள்ளார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், அண்டை நாட்டில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்தியா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் நேற்று (15) அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்யக்கூடாது என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு ராஜபக்ச அரசாங்கமே காரணம் என்றாலும், அநுரகுமார திசாநாயக்க தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக குரல் எழுப்பி வந்தார் என அவர் கூறியுள்ளார்.

மேலும், தேசிய மக்கள் சக்தி என்பது மக்கள் விடுதலை முன்னணியின் மற்றொரு பதிப்பு மட்டுமே என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...