5 28
ஏனையவை

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலளித்துள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சு

Share

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலளித்துள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சு

இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடர்ந்து அமெரிக்கா, நேற்று அறுகம் குடா பகுதிக்கான சுற்றுலா பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்கியுள்ளது என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை தரப்புடனான நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு அமைச்சகம், பொது பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் உடனடி மற்றும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றின் மூலம் கூறியுள்ளது.

எந்தவொரு பாதுகாப்பு எச்சரிக்கையையும் இலங்கை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. அதற்கேற்ப, சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டவர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை போக்க, இலங்கை அதிகாரிகள் உடனடியாக அந்தப் பகுதியில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை செயற்படுத்தினர்.

இதன்போது, குறித்த பிரதேசங்களில் வசிப்பவர்கள், சுற்றுலா ஸ்தாபனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ள சகலரும் இந்த முயற்சிகளுக்கு இலங்கை பொலிஸாருடன் நெருக்கமாக ஒத்துழைத்ததாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக இலங்கை அரசாங்கத்துடனும் சட்ட நடைமுறைப்படுத்தலுடனும் வலுவான பங்காளித்துவத்தை மதிப்பதாகக் கூறி அமெரிக்கத் தரப்பு நேற்று பிற்பகல், தமது பாதுகாப்பு எச்சரிக்கையை இரத்து செய்தது.

கடந்த ஒக்டோபரில், அறுகம் வளைகுடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா இடங்களில் இஸ்ரேலியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக கூறி, அமெரிக்க தூதரகம் தனது குடிமக்களுக்கு ஒரு பயண எச்சரிக்கை ஆலோசனையை வழங்கியிருந்தது.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...