tamilni 463 scaled
ஏனையவை

வடமாகாணத்தில் மீண்டுமொரு யுத்தம்!

Share

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் வகையில் மாகாண சபைகளுக்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், வடமாகாண காவல்துறையினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் எதிர்காலத்தில் பிரிவினை யுத்தம் ஏற்படும் என அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்க அவரது வாக்குறுதியை நிறைவேற்றினால், இலங்கைக்கு எதிரான பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் நாடுகள், பிரிவினைவாத அமைப்புக்கோ அல்லது வடக்கு காவல்துறையினருக்கோ எந்தவித தயக்கமும் இன்றி வெளிப்படையாக ஆதரவளிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மாகாண சபைகளிடமிருந்து காவல்துறை அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தும் சட்டமூலத்தை உதய கம்மன்பில இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

இலங்கையின் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டுமென கோரி, இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இந்த தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோசனை சட்டமூலத்தை முன்வைத்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...