6 35
இலங்கைஏனையவைசெய்திகள்

ரணிலையும் கம்மன்பிலவையும் சந்தேகிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித்

Share

ரணிலையும் கம்மன்பிலவையும் சந்தேகிக்கும் கர்தினால் மல்கம் ரஞ்சித்

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

குண்டுவெடிப்புக்கு முன்னர் குறிப்பிட்ட புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.என்.ஜே அல்விஸ் தலைமையில் குழுவொன்றை இந்த வருட ஆரம்பத்தில் நியமித்ததன் பின்னணி குறித்து அவர் வினவியுள்ளார்.

2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று நடந்த இந்த தாக்குதல் தொடர்பாக, முன்னைய அரச புலனாய்வு சேவை, தேசிய புலனாய்வுத்துறை மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளின் நடவடிக்கைகளை விசாரிக்கவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

எனினும், ரணில் விக்ரமசிங்க புதிய குழுவொன்றை நியமித்தமை சந்தேகத்திற்குரியது என்று கர்தினால் மல்கம் ரஞ்சித் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளான சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரை அரசியல் ரீதியாகப் பலிகடா ஆக்குவதற்காகவே அல்விஸ் தலைமையிலான குழுவை முன்னாள் ஜனாதிபதி நியமித்துள்ளதாக தாம் சந்தேகிப்பதாக கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையை கையாள்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதாகத் தெரிகிறது என்றும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
marriage5872 1667871504
இந்தியாசெய்திகள்

40 நாட்களில் 150 திருமணங்கள் ரத்து; சமூக ஊடகங்களே பிரதான காரணம்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 150 திருமணங்கள்...

New Project 3 20
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க ரணில் தயார்; தலதா அத்துகோரள

நாட்டில் தற்போது நிலவும் அனர்த்த நிலைமைகள் மற்றும் இடர் காலங்களில் அரசாங்கத்திற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க...

241009 Diego Garcia Tamils
அரசியல்இலங்கைசெய்திகள்

டியாகோ கார்சியாவில் இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டமை உறுதி: பிரித்தானியாவுக்கு மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்கும் நெருக்கடி!

இந்தியப் பெருங்கடலின் டியாகோ கார்சியா (Diego Garcia) தீவில் இலங்கைத் தமிழர்களைச் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருந்ததாக...

Screenshot 2025 12 18 075235
அரசியல்இலங்கைசெய்திகள்

அரச அறிவிப்புகள் சிங்களத்தில் மாத்திரம்: தமிழ் பேசும் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்! – ஜனாதிபதிக்கு சம உரிமை இயக்கம் கடிதம்

அரசாங்கத்தின் அனர்த்த கால உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் அரச அறிக்கைகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாமை குறித்து...