8 6
ஏனையவைசினிமாபொழுதுபோக்கு

சூரிக்கு இந்த வாய்ப்பை நான் தான் வாங்கி கொடுத்தேன்.. ஓப்பனாக கூறிய நடிகர்

Share

சூரிக்கு இந்த வாய்ப்பை நான் தான் வாங்கி கொடுத்தேன்.. ஓப்பனாக கூறிய நடிகர்

இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்து, ரெட், மாயாவி போன்ற படங்களை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தவர் சிங்கம்புலி. இவர் பல படங்களுக்கு வசனமும் எழுதி இருக்கிறார்.

இருப்பினும் சிங்கம்புலி காமெடி நடிகராக தான் மக்கள் மனதில் பெரிய அளவில் பிரபலம் ஆனார். ‘பாயசம் எங்கடா’ என்ற அவரது காமெடி தற்போதும் மீம்களாக இணையத்தில் உலா வருகிறது.

சிங்கம்புலி கடந்த ஆண்டு வெளியான மகாராஜா படத்தில் நெகடிவ் ரோலில் நடித்து இருந்தார். அது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் அதற்கு அவர் ஏன் என்ற விளக்கமும் கொடுத்திருந்தார்.

அதுமட்டுமின்றி சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘டாப் குக்கு டூப் குக்கு‘ என்ற ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகர் சூரி குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், “சுந்தர் சி இயக்கிய ‘கண்ணன் வருவான்’ என்ற படத்தில் நான் தான் அசிஸ்டண்ட் இயக்குனர்.

அப்போது அங்கு சூரி டெக்னீசியனாக வேலை பார்க்க வந்தார். நான் தான் சூரி குறித்து கவுண்டமணியிடம் கூறினேன். தற்போது, பெரிய நடிகர் ஆன பின்பும் அதை பற்றி பல இடங்களில் கூறி வருகிறார். அதை கண்டு எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 5
சினிமாபொழுதுபோக்கு

மணிரத்னம் படத்தில் நடிக்கக் கையை வெட்டவும் தயார்: நடிகை பிரியாமணி உருக்கமான கருத்து! 

பிரபல நடிகை பிரியாமணி, இயக்குநர் மணிரத்னம் அவர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதற்காகத் தனது...

4a0863b31f2176412487ed4e6877a71517618271634881270 original
சினிமாபொழுதுபோக்கு

சியான் 63: விக்ரமின் அடுத்த படத்தை அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்குகிறார்!

எப்போதும் சவாலான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் விக்ரமின் (சியான்) அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ...

25 69059a37b6b5b
சினிமாபொழுதுபோக்கு

கைகுலுக்கியபோது ரசிகர் பிளேடால் கிழித்தார் – 2005ஆம் ஆண்டு சம்பவத்தை பகிர்ந்த நடிகர் அஜித்!

சினிமா மற்றும் கார் ரேஸ் என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார், அண்மையில்...

25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...