24 664d68258e7ab
ஏனையவை

சிவகார்த்திகேயனின் அடுத்த ஜோடி இவர் தானா.. சென்சேஷனல் நடிகையுடன் முதல் முறை கூட்டணி

Share

சிவகார்த்திகேயனின் அடுத்த ஜோடி இவர் தானா.. சென்சேஷனல் நடிகையுடன் முதல் முறை கூட்டணி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் எஸ் கே 23 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் அமரன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் எஸ்கே 23ல் நடிக்கவுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட திரையுலகம் மூலம் பிரபலமான இளம் நடிகை ருக்மிணி வசந்த் நடித்து வருகிறார்.

ஆனால், இப்படத்தில் முதன் முதலில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவிருந்தது ராஷ்மிகா மந்தனா தானாம். அப்போது ராஷ்மிகாவின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் அவருக்கு பதிலாக ருக்மிணி தேர்வாகியுள்ளார் என கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் அடுத்ததாக டான் படத்தை இயக்கிய இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறதாம்.

இந்த நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகாவை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...