14 11
ஏனையவை

ரஷ்யாவின் பாரிய தாக்குதலில் இருளில் மூழ்கியது உக்ரைன்

Share

ரஷ்யாவின் பாரிய தாக்குதலில் இருளில் மூழ்கியது உக்ரைன்

உக்ரைன் (ukraine)மின்கட்டமைப்பை குறிவைத்து 120 ஏவுகணைகள், 90 டிரோன்களை ஏவி ரஷ்யா(russia) நடத்திய பாரிய தாக்குதலில் உக்ரைன் இருளில் மூழ்கியுள்ளது.

ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்ட பெரும்பாலான ஏவுகணைகள் , டிரோன்கள் ஆகியவற்றை உக்ரைன் பாதுகாப்புப்படை சுட்டு வீழ்த்தியது. ஆனாலும், சில ஏவுகணைகள், டிரோன்கள் இலக்குகளை தாக்கி அழித்தன.

தலைநகர் கீவ் மற்றும் டொனெட்ஸ்க், எல்விவ் மற்றும் ஒடேசா உள்ளிட்ட பல பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் மின் உற்பத்தி உள்கட்டமைப்புகள் பெரும்பாலான எண்ணிக்கையில் சேதமடைந்தன என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களில் ரஷ்யாவால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவே மிகப்பெரியதாகும் என்று கூறப்படுகிறது.

“உக்ரைனிய இராணுவ-தொழில்துறை வளாகத்தை ஆதரிக்கும் அத்தியாவசிய மின்சார உள்கட்டமைப்பை” குறிவைத்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா மற்றும் மோல்டோவா, ரஷ்யா வேண்டுமென்றே குளிர்காலத்தில் உக்ரைனில் உறைபனி நிலைமைகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டின, உக்ரைனிய எம்பி ஒருவர் பிபிசியிடம், கடந்த ஆண்டு குளிர்காலத்திற்கு முன்னதாக ரஷ்யா இதே போன்ற தாக்குதல்களை நடத்தியதாக கூறினார்.

உக்ரைனின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனம், தாக்குதல்களால் அதன் வெப்ப ஆற்றல் ஆலைகளுக்கு “குறிப்பிடத்தக்க சேதத்தை” ஏற்படுத்தியதாகவும், அதன் விளைவாக சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூறியது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...