இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஏனையவை

இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Share

இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

வரட்சியான காலநிலையால் நீர் நிலைகளில் நீரின் அளவு படிப்படியாகக் குறைந்து வருவதால், குடிநீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் மகாவலி, நீர்ப்பாசன திணைக்களங்களுடன் கலந்துரையாடி நீரை விநியோகிக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மேலதிக பொது முகாமையாளர் லசந்த வீரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கீழ் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் நீர் பாவனையாளர்கள் இருப்பதாகவும், இவர்களில் வீட்டு நீர் பாவனையாளர்களின் எண்ணிக்கை சுமார் 22 லட்சம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடிநீர் விநியோகத்தில் இதுவரை பெரிய பிரச்னை ஏற்படவில்லை. எனினும் வாகனங்களை கழுவுவதற்கும், பூக்கள் மற்றும் பிற செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கும் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்த வேண்டாம் என நுகர்வோரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், குளித்தல் போன்ற நடவடிக்கைகளின் போது வீட்டிற்கு அருகிலுள்ள நீரூற்றுகள் (மழை) அல்லது ஆறுகள் மற்றும் ஓடைகளைப் பயன்படுத்துவதன் மூலம் குடிநீரை சுத்திகரிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதால், வீட்டு குடிநீர் கட்டணத்தை குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...