இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஏனையவை

இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Share

இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

வரட்சியான காலநிலையால் நீர் நிலைகளில் நீரின் அளவு படிப்படியாகக் குறைந்து வருவதால், குடிநீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் மகாவலி, நீர்ப்பாசன திணைக்களங்களுடன் கலந்துரையாடி நீரை விநியோகிக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மேலதிக பொது முகாமையாளர் லசந்த வீரசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கீழ் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் நீர் பாவனையாளர்கள் இருப்பதாகவும், இவர்களில் வீட்டு நீர் பாவனையாளர்களின் எண்ணிக்கை சுமார் 22 லட்சம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடிநீர் விநியோகத்தில் இதுவரை பெரிய பிரச்னை ஏற்படவில்லை. எனினும் வாகனங்களை கழுவுவதற்கும், பூக்கள் மற்றும் பிற செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கும் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்த வேண்டாம் என நுகர்வோரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், குளித்தல் போன்ற நடவடிக்கைகளின் போது வீட்டிற்கு அருகிலுள்ள நீரூற்றுகள் (மழை) அல்லது ஆறுகள் மற்றும் ஓடைகளைப் பயன்படுத்துவதன் மூலம் குடிநீரை சுத்திகரிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதால், வீட்டு குடிநீர் கட்டணத்தை குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...