ஏனையவை

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் ரணில்!

Share
17 16
Share

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் ரணில்!

கடந்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், மதுவரிச் சட்டத்திற்கு முரணான மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம், அப்போதைய நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் பிரதிவாதிகள் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பளிக்கக் கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

கண்டியில் (Kandy) மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் இருவரே இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

முன்னாள் நிதி அமைச்சர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி, நிதியமைச்சின் செயலாளர், வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 39 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்போது, ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் அரசியல் நோக்கத்துடன் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், கலால் வரிச் சட்ட விதிகளைத் தவிர்த்து எதேச்சதிகாரமான மற்றும் அநீதியான முறையில் அந்த அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...

3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas),...