17 16
ஏனையவை

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் ரணில்!

Share

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் ரணில்!

கடந்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், மதுவரிச் சட்டத்திற்கு முரணான மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம், அப்போதைய நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் பிரதிவாதிகள் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பளிக்கக் கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

கண்டியில் (Kandy) மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் இருவரே இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

முன்னாள் நிதி அமைச்சர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி, நிதியமைச்சின் செயலாளர், வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 39 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்போது, ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் அரசியல் நோக்கத்துடன் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், கலால் வரிச் சட்ட விதிகளைத் தவிர்த்து எதேச்சதிகாரமான மற்றும் அநீதியான முறையில் அந்த அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...