17 16
ஏனையவை

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் ரணில்!

Share

தொடர் சர்ச்சைகளில் சிக்கும் ரணில்!

கடந்த ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், மதுவரிச் சட்டத்திற்கு முரணான மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம், அப்போதைய நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் பிரதிவாதிகள் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பளிக்கக் கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

கண்டியில் (Kandy) மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் இருவரே இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

முன்னாள் நிதி அமைச்சர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் கலால் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி, நிதியமைச்சின் செயலாளர், வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 39 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்போது, ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் அரசியல் நோக்கத்துடன் இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், கலால் வரிச் சட்ட விதிகளைத் தவிர்த்து எதேச்சதிகாரமான மற்றும் அநீதியான முறையில் அந்த அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...