22 5
ஏனையவை

புதிய அரசின் கொள்கை பிரகடனம் தொடர்பில் வெளியான தகவல்

Share

புதிய அரசின் கொள்கை பிரகடனம் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நவம்பர் 21ஆம் திகதி 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சமர்பிப்பார் என தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தினை தொடர்பாடல் தணைக்களம் இன்று (16.11.2024) குறிப்பிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 33(A) பிரிவின் கீழ், நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றதில் முன்வைப்பதற்கும், நாடாளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக நாடாளுமன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் நவம்பர் 21ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைப்பார்.

இங்கு ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக தனது அரசாங்கத்தின் பார்வை பற்றிய விரிவான பகுப்பாய்வை நாடாளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் வழங்கவுள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...