22 5
ஏனையவை

புதிய அரசின் கொள்கை பிரகடனம் தொடர்பில் வெளியான தகவல்

Share

புதிய அரசின் கொள்கை பிரகடனம் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நவம்பர் 21ஆம் திகதி 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சமர்பிப்பார் என தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தினை தொடர்பாடல் தணைக்களம் இன்று (16.11.2024) குறிப்பிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 33(A) பிரிவின் கீழ், நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றதில் முன்வைப்பதற்கும், நாடாளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக நாடாளுமன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் நவம்பர் 21ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைப்பார்.

இங்கு ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக தனது அரசாங்கத்தின் பார்வை பற்றிய விரிவான பகுப்பாய்வை நாடாளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் வழங்கவுள்ளார்.

Share
தொடர்புடையது
images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...

w 1280h 720format jpgimgid 01ke937mtdxb7xrchhekg0a7eyimgname sonia gandhi admitted ganga ram hospital delhi pollution health update 2 1767684428621
ஏனையவை

இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி: டெல்லியில் தீவிர சிகிச்சை!

இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான சோனியா காந்தி, திடீர்...