MediaFile 3 1
ஏனையவை

பொரள்ளையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருளுடன் இருவர் கைது!

Share

கொழும்பு, பொரள்ளை சஹஸ்புர பகுதியில் பொலிஸ் உத்தரவை மீறிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

நேற்று (02) வெள்ளிக்கிழமை இரவு பொரள்ளை பகுதியில் பொலிஸார் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டனர்.

பொலிஸ் உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள் வேகமாகச் சென்றதால், அதனைத் தடுக்கும் நோக்கில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதன்போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். எனினும், பின்னால் அமர்ந்து பயணித்த நபர் அங்கிருந்து தப்பியோடினார்.

தப்பியோடிய நபரைத் தேடும் பணியில் ஈடுபட்ட பொலிஸார், அவரைத் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு வேயாங்கொடை பகுதியில் வைத்து இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநரிடமிருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (03) ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொரள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...