18 13
ஏனையவை

ஈஸ்டர் தாக்குதல்: அரசியல் கட்சி தலைவரும் முன்னாள் படைத்தளபதியும் விரைவில் கைது..!

Share

ஈஸ்டர் தாக்குதல்: அரசியல் கட்சி தலைவரும் முன்னாள் படைத்தளபதியும் விரைவில் கைது..!

ஈஸ்டர் தாக்குதல்(easter attack) தொடர்பாக புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளின்படி, முன்னாள் படைத் தளபதி மற்றும் அரசியல் கட்சித் தலைவர் ஒருவரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அண்மையில் சனல் 4 ஊடாக வெளிப்படுத்திய ஹன்சீர் ஆசாத் மௌலானாவிடம், அது தொடர்பான மேலதிக விபரங்களை ‘ஜூம்’ தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் சாட்சியங்களைப் பெற்று, நீதிமன்ற உத்தரவின் பேரில் சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் மேலும் தெரியவந்துள்ளது.

சனல் 4 நிகழ்ச்சி குறித்து, முன்னாள் அரசாங்கத்தால் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ஐ. ஜனாப் இமாம் தலைமையில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசேட அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்குமாறு ஆசாத் மௌலானா கோரப்பட்டிருந்ததுடன், தற்போது வெளிநாட்டில் உள்ள அவர் விசாரணையில் பங்கேற்கவில்லை.

 

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...