3 28
ஏனையவை

அநுர அலையில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அர்ச்சுனா

Share

அநுர அலையில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அர்ச்சுனா

இலங்கையில் ஏற்பட்ட அநுர அலை தென்னிலங்கை அரசியல் மட்டுமன்றி, தமிழர் தேசிய கட்டமைப்பை தகர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய, வட மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

தமிழர் தாயகத்தில் பாரம்பரிய தமிழ் கட்சி பிளவுபட்டு பல பிரிவுகளாக களமிறங்கிய பெரும் தோல்வியை சந்திதுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாறாக கடந்த சில மாதங்களாக பெரும் பேசுபொருளாக இருந்த வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் மீதான மக்களின் ஆதரவு தமிழ் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறுகிய காலத்தில் பிரபலமான வைத்தியர், நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்புகள் தற்போது ஏற்பட்டுள்ளதாக தேர்தல் முடிவுகள் மூலம் அறிய முடிகிறது.எனினும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதுவரை வெளியான யாழ் மாவட்ட தேர்தல் முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தி 59688 வாக்குகளையும் இலங்கை தமிழரசு கட்சி 53250 வாக்குகளையும், சுயேட்சையாக போட்டியிட்ட வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் 21433 வாக்குகளை பெற்றுள்ளார்.

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரியில் 5,978 வாக்குகளும், யாழ்ப்பாணத்தில் 1,067, நெடுந்தீவில் 601 வாக்குகளும் கிளிநொச்சியில் 2,098 வாக்குகளும், மானிப்பாயில் 2,413 வாக்குகளும், நல்லூரில் 2,279 வாக்குகளும், பருத்தித்துறையில் 1,572 வாக்குகளும் வட்டுக்கோட்டையில் 1,877 வாக்குகளையும் பெற்றுள்ளார். அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகும் வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இலங்கையில் அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்தவர்கள் மற்றும் நாடாளுமன்றத்தை பல தடவைகள் பிரதித்துவம் செய்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு இம்முறை மக்களால் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...