42764c268da4b2363ef75cfd89b8c9b8
உலகம்ஏனையவைசெய்திகள்

நேபாள குடிமக்களை போருக்கு பயன்படுத்தாதீர்கள்..! இழப்பீடு வழங்க ரஷ்யாவிடம் அதிகாரிகள் கோரிக்கை

Share

நேபாள குடிமக்களை போருக்கு பயன்படுத்தாதீர்கள்..! இழப்பீடு வழங்க ரஷ்யாவிடம் அதிகாரிகள் கோரிக்கை

தங்கள் நாட்டு குடிமக்களை உக்ரைன் மீதான போர் தாக்குதலில் பயன்படுத்துவதற்காக வேலைக்கு எடுக்க வேண்டும் என ரஷ்யாவிடம் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனுடனான போர் தாக்குதலுக்காக தங்கள் நாட்டு குடிமக்களை ரஷ்யா வேலைக்கு எடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நேபாள அதிகாரிகள் ரஷ்யாவிடம் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் போரில் 6 நேபாள கூலிப்படையினர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த அழைப்பானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நேபாளத்தின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் போரில் ரஷ்யாவால் ஈடுபடுத்தப்பட்டு கொல்லப்பட்ட நேபாளிகளின் பெயர் பட்டியல் வெளியிட்டுள்ளது.

அத்துடன் அதில், உயிரிழந்த நேபாளிகளின் உடலை ரஷ்யா தாயகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

கூடுதலாக அறிக்கையில்,  ரஷ்யாவிற்கு போரில் சேவையாற்றி வரும் நேபாளிகளை விடுவிக்கவும் மற்றும் போர் தாக்குதலின் போது உக்ரைன் ஆயுத படையால் கைது செய்யப்பட்டவர்களையும் விடுவிக்க நேபாள அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்கான நேபாள தூதர் மிலன் ராஜ் துலாதாரின் மதிப்பீட்டின் படி, கூலிப்படை ஆட்களாக ரஷ்ய ராணுவத்தில் 150 முதல் 200 நேபாளிகள் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...