1 48
ஏனையவை

இது ஒரு கீழ்த்தரமான செயல்.. தனுஷை விளாசிய நடிகை நயன்தாரா.. என்ன நடந்தது

Share

இது ஒரு கீழ்த்தரமான செயல்.. தனுஷை விளாசிய நடிகை நயன்தாரா.. என்ன நடந்தது

நடிகை நயன்தாராவின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக Nayanthara: Beyond the Fairy Tale எனும் ஆவணப்படம் உருவாகியுள்ளது. இதற்கான ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த நிலையில், வருகிற 18ஆம் தேதி இதனை நெட்பிளிக்ஸ் வெளியிடுகிறது.

இந்த ஆவணப்படம் நயன்தாராவின் திருமணம் முடிந்தகையோடு வெளிவரவிருந்த நிலையில், தொடர்ந்து தள்ளிக்கொண்டே போனது. இதற்கு தனுஷ் தான் காரணம் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது தனுஷை கடும் கோபத்துடன் நடிகை நயன்தாரா விளாசியுள்ளார்.

மூன்று பக்கங்கள் இந்த இந்த அறிக்கையில், தனுஷ் குறித்தும், ஏன் Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்படம் ஏன் தாமதமானது என்பது குறித்தும் கூறியுள்ளார்.

இதில் துவக்கத்தில் தனுஷ் தனது தந்தை மற்றும் அண்ணனின் துணையுடன் சினிமாவிற்கு வந்தவர் என்றும், தான் தனி ஒரு பெண்ணாக எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் வந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார் நயன்.

நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தை என்னைப் போலவே ஏராளமான எனது ரசிகர்களும், நல விரும்பிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமன்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்திருக்கிறோம்.

காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த ‘நானும் ரௌடிதான்’ திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது.

நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.

சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராய் Legal Notice அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு பத்து கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாகவும் இருக்கிறது.

கீழ்த்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்” உள்ளிட்ட பல விஷயங்களை குறிப்பிட்ட நயன்தாரா பேசியுள்ளார்.

Share
தொடர்புடையது
1736243504 school 2
ஏனையவை

மாணவர்களுக்கான 6,000 ரூபா உதவித்தொகை: வங்கிக் கணக்குகளில் வைப்பு – பெற்றோர் பெற்றுக்கொள்ளலாம்!

பாடசாலை மாணவர்களின் கற்றல் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 6,000 ரூபாய் நிதி உதவி,...

law 1
ஏனையவை

பருத்தித்துறையில் லஞ்ச் சீற் பாவனைக்குத் தடை: மீறினால் நேரடி நீதிமன்ற நடவடிக்கை!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் லஞ்ச் சீற் (Lunch Sheet) பயன்படுத்துவதற்கான தடை நேற்று...

Coconut Daily Ceylon
ஏனையவை

தேங்காய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: இடைத்தரகர்களைத் தவிர்த்து நேரடி விற்பனை!

நாட்டில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், வெளிச்சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான விலை உயர்வைக் கட்டுப்படுத்த தென்னை...

25 690723f808229
ஏனையவை

நைஜீரியாவில் ஐ.எஸ். குழுவினர் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல் – ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு!

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் இயங்கி வரும் ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதக் குழுவினருக்கு எதிராக அமெரிக்க இராணுவம்...