3 32
ஏனையவை

சர்வஜன அதிகாரம் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் திலித்துக்கு

Share

சர்வஜன அதிகாரம் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் திலித்துக்கு

2024 பொதுத் தேர்தலின் முடிவுகளுக்கமைய சர்வஜன அதிகாரம் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை கம்பஹா (Gampaha) மாவட்ட வேட்பாளராக போட்டியிட்ட சர்வஜன சக்தியின் தலைவர் திலித் ஜயவீரவுக்கு (Dilith Jayaweera) வழங்க சர்வஜன அதிகாரம் கட்சின்யின் நிறைவேற்றுக் குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

தொழிலதிபர் திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரம் கட்சி 22 தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிட்ட நிலையில் 178,006 வாக்குகளை பெற்றுக் கொண்டது.

1.60 வாக்குகளைப் பெற்ற நிலையில் ஒரு ஆசனங்களை கூட நேரடியாக கைப்பற்றவில்லை. கிடைக்கப் பெற்ற மொத்த வாக்குகளுக்கமைய 1 தேசிய பட்டியல் மாத்திரமே ஒதுக்கப்பட்டது.

சர்வஜன அதிகாரம் கட்சி சார்பில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட ரொஷான் ரணசிங்க, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட உதய கம்மன்பில, கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட திலும் அமுனுகம ஆகியோர் தோல்விடைந்துள்ளனர்.

இதனால் சர்வஜன கட்சிக்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தை திலித் ஜயவீரவுக்கு வழங்க அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.

தொழிலதிபர் திலித் ஜயவீர 2024 ஜனாதிபதித் தேர்தலில் சர்வஜன கட்சி சார்பில் போட்டியிட்டு 122,096 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...