14 9
ஏனையவை

நாடாளுமன்றம் செல்லும் நாமல்! பதவிப் பிரமாணம் குறித்து வெளியான தகவல்

Share

நாடாளுமன்றம் செல்லும் நாமல்! பதவிப் பிரமாணம் குறித்து வெளியான தகவல்

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராசபக்ச (Namal Rajapaksa) பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) இன்றையதினம் (16.11.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய சாகர காரியவசம், “இந்த ஆணையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எங்களிடம் மாவட்ட அளவில் 02 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளும் தேசிய பட்டியலில் ஒரு நாடாளுமன்ற தவியும் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றது.

160 நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து 196 பேர் நேரடியாகவும் 29 பேர் தேசியப் பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

இந்த தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அகில இலங்கை ரீதியில் 141 ஆசனங்களை கைப்பற்றியதுடன், சிறிலங்கா பொதுஜன பெரமுன 31,201 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...