tamilni 167 scaled
ஏனையவை

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் பொலிசாரைத் தாக்கிய புலம்பெயர்ந்தோர்

Share

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் பொலிசாரைத் தாக்கிய புலம்பெயர்ந்தோர்

பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது, பிரான்ஸ் நாட்டு பொலிசாரை புலம்பெயர்வோர் சிலர் தாக்கியுள்ளனர்.

பிரான்சின் Calais பகுதியிலிருந்து ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்வோர் சிலரை பிரான்ஸ் நாட்டு பொலிசார் தடுத்துள்ளனர்.

அப்போது புலம்பெயர்வோர் சிலர் பொலிசார் மீது பாறைகளைத் தூக்கி வீசியுள்ளனர். சிலர் கட்டைகளைக் காட்டி பொலிசாரை மிரட்டிவிட்டு படகில் ஏறி பிரித்தானியா நோக்கி புறப்பட்டுள்ளனர்.

பொலிசார் உடலில் அணிந்திருந்த கமெராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. தகவல் பிரித்தானிய தரப்பைச் சென்றடைய, அங்கு தயாராக காத்திருந்த பிரித்தானிய பொலிசார் Salih Abdullah (33) மற்றும் Ahmed Khater (25) என்னும் இருவரைக் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள் விதி மீறி பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றது உறுதியானதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் முறையே 14, 12 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அப்துல்லா ஈராக்கையும், அஹமது சூடானையும் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பிரித்தானியாவுக்குள் சிறு படகொன்றில் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 51 பேர் கொண்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...