1 1 4
ஏனையவை

தமிழர் பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட லண்டன் பெண்

Share

தமிழர் பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட லண்டன் பெண்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நபரொருவருக்கு சமூக வலைத்தளத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் லண்டனில் (London) இருந்து வவுனியாவிற்கு (Vavuniya) வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், லண்டனில் வசித்து வரும் குறித்த பெண், வெளிநாட்டில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்துள்ளார்.

இந்தநிலையில், நபர் ஒருவர் தனது வாகனத்தை தரவில்லை எனத் தெரிவித்த பெண் அந்நபருக்கு எதிராக தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டு வந்துள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் தேர்தல் முடிந்த பின்னர் காவல்துறையில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
2024 11 25 Pudukkudiyiruppu MV 2
ஏனையவை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு: 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வரும்...

images 7 2
ஏனையவை

டெல்லி கார் வெடிப்பு ‘தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்’: இந்தியாவுக்கு உதவியளிக்கத் தயார் என அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் அண்மையில் இடம்பெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை, ஒரு “தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்”...