ஏனையவை

தமிழர் பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட லண்டன் பெண்

1 1 4
Share

தமிழர் பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட லண்டன் பெண்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நபரொருவருக்கு சமூக வலைத்தளத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் லண்டனில் (London) இருந்து வவுனியாவிற்கு (Vavuniya) வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், லண்டனில் வசித்து வரும் குறித்த பெண், வெளிநாட்டில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்துள்ளார்.

இந்தநிலையில், நபர் ஒருவர் தனது வாகனத்தை தரவில்லை எனத் தெரிவித்த பெண் அந்நபருக்கு எதிராக தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டு வந்துள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் தேர்தல் முடிந்த பின்னர் காவல்துறையில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த பெண்ணை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...