7 30
ஏனையவை

உடனே போரை நிறுத்துங்கள்: ஈரானிடம் வலியுறுத்திய லெபனான்!

Share

உடனே போரை நிறுத்துங்கள்: ஈரானிடம் வலியுறுத்திய லெபனான்!

லெபனானில் (Lebanon) இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பு போரை தீவிரப்படுத்துவதனால் உடனே போரை நிறுத்த வேண்டும் என லெபனான் பிரதமர் ஈரானிடம் வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த இஸ்ரேல் (Israel), தற்போதுவரை பலஸ்தீனத்தை (Palestine) ஆக்கிரமித்து வருகிறது.

இந்த தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹமாஸ் (Hamas) அமைப்பானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஹமாஸ் மீதும் பலஸ்தீனம் மீதும் போரை அறிவித்தது. இந்த போரில் இதுவரை 45,000க்கும் அதிகமான பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

லட்சக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் மீதும் பாலஸ்தீனம் மீதும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கும் விதமாக லெபனானில் இருந்து இயங்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா எனும் அமைப்பாணது இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தி வருகிறது.

ஹமாஸ் போன்று இது சிறிய குழு கிடையாது, ஆயுத பலத்திலும், எண்ணிக்கையிலும் மிகப்பெரிய குழுவாக ஹிஸ்புல்லா அமைப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் நேற்றையதினம் (15.11.2024) ஈரான் தலைவர் அலி கமேனியின் (Ali Khamenei) ஆலோசகரான அலி லாரிஜானி (Ali Larijani) பெய்ரூட்டிற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

உடனே போரை நிறுத்துங்கள்: ஈரானிடம் வலியுறுத்திய லெபனான்! | Lebanon Urges Iran End Israel Hezbollah Conflict

அவரை வரவேற்றிருந்த லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டி (Najib Mikati), போர் நிறுத்தம் குறித்த கோரிக்கையை வைத்திருக்கிறார்.

இந்த சந்திப்பின்போது ஐநா தீர்மானம் 1701ஐ மேற்கோள் காட்டி, போர் நிறுத்தம் குறித்த பிரதமர் நஜிப் வலியுறுத்தியுள்ளார்.

இந்த தீர்மானத்தின்படி, தெற்கு லெபனானில் லெபனான் இராணுவம் மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படையினர் மட்டுமே செயல்பட வேண்டும் என்று கூறுகிறது.

அதாவது ஹிஸ்புல்லா இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இது செயல்படுத்தப்படவில்லை.

எனவே, தெற்கு லெபனான் பகுதியிலிருந்து ஹிஸ்புல்லா வெளியேற வேண்டும் என்றும், அதன் மூலம் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் லெபனான் அரசு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...

Easter Sunday attacks
ஏனையவை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் விசாரணைக்குள்ளான சந்தேகநபர் பிரித்தானியாவில் தஞ்சம் கோருகிறார்!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் (Easter...

articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...

articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...