7 30
ஏனையவை

உடனே போரை நிறுத்துங்கள்: ஈரானிடம் வலியுறுத்திய லெபனான்!

Share

உடனே போரை நிறுத்துங்கள்: ஈரானிடம் வலியுறுத்திய லெபனான்!

லெபனானில் (Lebanon) இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பு போரை தீவிரப்படுத்துவதனால் உடனே போரை நிறுத்த வேண்டும் என லெபனான் பிரதமர் ஈரானிடம் வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த இஸ்ரேல் (Israel), தற்போதுவரை பலஸ்தீனத்தை (Palestine) ஆக்கிரமித்து வருகிறது.

இந்த தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹமாஸ் (Hamas) அமைப்பானது கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஹமாஸ் மீதும் பலஸ்தீனம் மீதும் போரை அறிவித்தது. இந்த போரில் இதுவரை 45,000க்கும் அதிகமான பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

லட்சக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் மீதும் பாலஸ்தீனம் மீதும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கும் விதமாக லெபனானில் இருந்து இயங்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா எனும் அமைப்பாணது இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தி வருகிறது.

ஹமாஸ் போன்று இது சிறிய குழு கிடையாது, ஆயுத பலத்திலும், எண்ணிக்கையிலும் மிகப்பெரிய குழுவாக ஹிஸ்புல்லா அமைப்பு காணப்படுகிறது.

இந்நிலையில் நேற்றையதினம் (15.11.2024) ஈரான் தலைவர் அலி கமேனியின் (Ali Khamenei) ஆலோசகரான அலி லாரிஜானி (Ali Larijani) பெய்ரூட்டிற்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

உடனே போரை நிறுத்துங்கள்: ஈரானிடம் வலியுறுத்திய லெபனான்! | Lebanon Urges Iran End Israel Hezbollah Conflict

அவரை வரவேற்றிருந்த லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டி (Najib Mikati), போர் நிறுத்தம் குறித்த கோரிக்கையை வைத்திருக்கிறார்.

இந்த சந்திப்பின்போது ஐநா தீர்மானம் 1701ஐ மேற்கோள் காட்டி, போர் நிறுத்தம் குறித்த பிரதமர் நஜிப் வலியுறுத்தியுள்ளார்.

இந்த தீர்மானத்தின்படி, தெற்கு லெபனானில் லெபனான் இராணுவம் மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படையினர் மட்டுமே செயல்பட வேண்டும் என்று கூறுகிறது.

அதாவது ஹிஸ்புல்லா இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் இது செயல்படுத்தப்படவில்லை.

எனவே, தெற்கு லெபனான் பகுதியிலிருந்து ஹிஸ்புல்லா வெளியேற வேண்டும் என்றும், அதன் மூலம் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் லெபனான் அரசு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...