tamilnig scaled
ஏனையவை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் பிரபல நடிகை

Share

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் பிரபல நடிகை

இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களாக முன்னணி நடிகையான தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

3 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில் அவர்கள் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று கொழும்பு கோட்டை பிரதான நீதவான் திலின கமகேவிடம் தெரிவித்தது.

இருவருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இருந்தால் மட்டும் சந்தேகநபர்களாக பெயரிடுமாறு நீதவான் விடுத்துள்ள உத்தரவிற்கமைய, குற்றப் புலனாய்வு திணைக்களம், சம்பவத்தில் சந்தேக நபர்களாக பெயரிடப்படுவதாக நீதவானிடம் தெரிவித்தது.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதால், தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் தமக்கு தேவையான பிணையை வழங்குமாறு சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் கோரியிருந்தனர். இது தொடர்பில் நீதிமன்றில் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நடிகை தமிதா அபேரத்னவையும் அவரது கணவரையும் நேற்றைய தினமாக ஆறாம் திகதி வரை கைது செய்ய தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நேற்று முன் பிணை வழங்கியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 7 1
ஏனையவை

தையிட்டியில் தொடரும் பதற்றம்: சிலையுடன் வந்த குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டனர் – பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பு!

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்னால் காணி உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று யாழ். பல்கலைக்கழக...

images 6 1
ஏனையவை

ஜனவரி 5 முதல் மழை அதிகரிக்கும்: வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, எதிர்வரும் ஜனவரி 05-ஆம் திகதி முதல்...

26 6958b2e786c0e
ஏனையவை

திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை: 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் கடற்கரையில் அனுஷ்டிப்பு!

திருகோணமலை கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல்...

image 339b4818b7
ஏனையவை

மின்சாரக் கட்டணத்தை 11% அதிகரிக்கத் திட்டம்: மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி – ஜனக ரத்நாயக்க கடும் சாடல்!

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட இழப்புகளைக் காரணம் காட்டி, மின்சாரக் கட்டணத்தை 11% அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார...