1 36
ஏனையவை

மௌனம் காக்கும் இஸ்ரேல்: இராணுவ தலைமையகத்தையே தாக்கியதாக அறிவித்த ஹிஸ்புல்லா!

Share

மௌனம் காக்கும் இஸ்ரேல்: இராணுவ தலைமையகத்தையே தாக்கியதாக அறிவித்த ஹிஸ்புல்லா

ஸ்ரேலின் (Israel) இராணுவ தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் மத்திய டெல் அவிவில் (Tel Aviv) உள்ள இராணுவ தலைமையகம் மீது இன்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலானது, ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்டதாகவும், இலக்குகள் துல்லியமாக தாக்கப்பட்டதாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

இதேவேளை, லெபனானில் இருந்து வந்த இரண்டு ட்ரோன்களை வடக்கு இஸ்ரேலில் வைத்தே இடைமறித்து அழித்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும், எந்த ட்ரோன்களும் மத்திய இஸ்ரேலை அடைந்ததாகவோ அல்லது இராணுவ தலைமையகத்திற்கு அருகில் வந்ததாகவோ அறிகுறிகள் தென்படவில்லை என கூறப்படுகிறது.

டெல் அவிவில் உள்ள இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் மையமாக இருக்கும் இந்த தளம், போர் அமைச்சரவை உட்பட பல இராணுவ நிறுவனங்களின் தலைமையகத்தை கொண்டுள்ளது.

அத்தோடு, இந்த தலைமையகத்தின் மீதான தாக்குதல் அறிவிப்பு தொடர்பில் இஸ்ரேலிய தரப்பில் இருந்து உடனடி கருத்துகள் வெளியிடப்படவில்லை.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...