ஏனையவை

கொழும்பு துறைமுகத்தில் இந்தியாவின் போர்க்கப்பல் தொழிற்சாலை!

Share
19
Share

கொழும்பு துறைமுகத்தில் போர்க்கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் தொழிற்சாலையை நிறுவ இந்தியா தயாராகி வருவதாக முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியாவுடன் கையெழுத்தான ஒப்பந்தங்களை திசைக்காட்டி அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்களில் முக்கியமானவர்கள் பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவருடன் தனிப்பட்ட தொடர்புகளை கொண்ட பல அமைச்சர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் கையெழுத்தான ஒப்பந்தங்களின் எண்ணிக்கை ஏழு என்று அரசாங்கம் கூறியிருந்தாலும், இந்திய ஊடகங்கள் 10 என்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் இந்திய இராணுவ ஆயுதத் தொழிற்சாலைகள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை நிறுவுவது குறித்த விவரங்களை இந்திய பாதுகாப்புச் செயலாளரே இந்திய ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதாகவும் புபுது ஜாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...

3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas),...