8 27
ஏனையவை

இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்துள்ள ஹிஸ்புல்லாக்களின் “நம்பர் 2”

Share

இஸ்ரேலுக்கு எதிராக சபதம் எடுத்துள்ள ஹிஸ்புல்லாக்களின் “நம்பர் 2”

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நைம் காசிம் (Naim Qassem), இஸ்ரேலை (Israel) தோற்கடிப்பதாக உறுதியளித்துள்ளதாக லெபனானின் தேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் கொன்றதைத் தொடர்ந்து ஹிஸ்புல்லாவின் “நம்பர் 2” என்று அழைக்கப்படும் நைம் காசிமை” (Naim Qassem) கடந்த மாதம் 25 ஆம் திகதி தலைவராக ஹிஸ்புல்லா அறிவித்தது.

இந்த நிலையில், துணைத் தலைவராக இருந்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்ட காசிம், ஈரான் ஆதரவு பெற்ற லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளராக ஹசன் நஸ்ரல்லாவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில், “இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்காக தாங்கள் நிச்சயம் வெற்றி அடைவோம்” என இஸ்ரேலுக்கு எதிராக நைம் காசிம் குரல் கொடுத்துள்ளார்.

அத்தோடு, ஹிஸ்புல்லாக்களுக்காக அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையுடன் போராடி இறந்தவர்களை அவர் பாராட்டவும் செய்துள்ளார்.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாத தொடக்கத்தில் லெபனானில் போர்நிறுத்தத்தை ஏற்குமாறு இஸ்ரேலியர்களுக்கு அழைப்பு விடுத்ததோடு, இல்லாவிட்டால் இஸ்ரேலுக்கு வலியை எதிர்நோக்க நேரிடும் என காசிம் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...