4 23
ஏனையவை

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் முதல் அரசாங்கம் : சட்டத்தரணிகள் சம்மேளனம் பெருமிதம்

Share

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் முதல் அரசாங்கம் : சட்டத்தரணிகள் சம்மேளனம் பெருமிதம்

இதுவரையிலான தேர்தல் முடிவுகளில் இருந்து, தேசிய மக்கள் சக்தி, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் அல்லது அதனை விட சிறிய எண்ணிக்கை குறைவான ஆசனங்களை பெறும் என்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் இந்த எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றால், விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

2010 இல் மக்கள் கூட்டணியும் 2020 இல் பொதுஜன பெரமுனவும், மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாக ஆசனங்களை பெற்றதால்,மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற சில எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டியிருந்தது.1994 ஆம் ஆண்டு பிரதமர் சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் இந்த வெற்றிக்கான ஒரே சமாந்தரமாகும்.

வடக்கிலும் கிழக்கிலும் தேசிய மக்கள் சக்தி, கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது, இதன் மூலம் இலங்கையில் உள்ள பலதரப்பட்ட சமூகங்களை ஒன்றிணைக்கக்கூடிய தலைவராக தற்போதைய ஜனாதிபதி செயற்படமுடியும்.

அத்துடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரைவாக நிறைவேற்றுவதற்கு இந்த தேர்தல் முடிவு வழி வகுக்கும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டின் திசையில், குறிப்பாக அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.என்பதற்கு இந்த மாபெரும் வெற்றி ஒரு சான்றாகும்.எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், வரும் ஆபத்துக்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தற்போதைய ஜனாதிபதி கூறியது போல் கடந்த காலங்களில் அரசியல் சக்திகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் சட்டங்களை இயற்றினர்.எனவே ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை சிதைக்கும் சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை இயற்றுவதற்கான செயற்பாடுகளை தேசிய மக்கள் சக்தி எதிர்க்க வேண்டும்.

பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்க்கையை உயர்த்தவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், ஊழலைச் சமாளிக்கவும், தேசிய நல்லிணக்கப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், அரசியலமைப்பு சீர்திருத்தத்தை இயற்றவும், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் எதிர்பார்க்கும் வாக்காளர்களின் அசாதாரண எதிர்பார்ப்புகளை புதிய ஆட்சி நிர்வகிக்க வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் தலைமையானது, அதன் புதிய மற்றும் ஒப்பீட்டளவில் அனுபவமற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்; மற்றும் அமைச்சர்கள் கட்சி இதுவரை கடைப்பிடித்து வந்த கொள்கை நிலைகளில் இருந்து விலகிச் செல்லாமல் இருப்பதையும், அவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை மீறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

மக்களால் அதிக பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த கால அரசாங்கங்களின் தலைவிதியை தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே புதிய அரசாங்கம் வெற்றியடையும் என்று நாம் நம்புவோம்;. இலங்கை அரசாங்கம் மீண்டும் தோல்வியடைவதை தாங்கிக்கொள்ள முடியாது என்றும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...