8 3
ஏனையவை

ட்ரம்பின் திட்டத்தால் இலங்கைக்கும் பேரிடி: வேலை பறிபோகும் அபாயத்தில் ஆயிரக்கணக்கானோர்!

Share

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) வெளிநாடுகளுக்கு வழங்கும் நிதியை முடக்க தீர்மானத்திருப்பது, இலங்கையின் அரச சாரா நிறுவனங்களை (NGO) நெருக்கடிக்குள் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவு காரணமாக இலங்கையில் 1000 இற்கும் மேற்பட்டோரின் வேலைகள் ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மனித உரிமைகள், நல்லாட்சி, பெண்கள் மற்றும் LGBTQ உரிமைகள் ஆகியவற்றில் பணிபுரியும் இலங்கையின் கணிசமான எண்ணிக்கையிலான அரசு சாரா நிறுவனங்கள் USAID ஆதரவுடன் செயற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்க நிதி நிறுத்தத்தைத் தொடர்ந்து அவ்வாறான பல நிறுவனங்கள் தங்கள் திட்டங்களைத் தக்க வைத்துக் கொள்ள போராடி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை, சர்வதேச மேம்பாட்டுத் திட்டங்களை விட உள்நாட்டு செலவினங்களுக்கு முன்னுரிமை அளிக்கும், “அமெரிக்காவின் முதல் விதி” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இவ்வாறனதொரு பின்னணியில், ட்ரம்பின் குறித்த திட்டமானது, கண்மூடித்தனமாக உள்ளது என்றும் இதன் காரணமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டியிருப்பதாகவும் தொடர்ந்தும் நிதி முடக்கம் தொடர்ந்தால் பல திட்டங்கள் சரிந்துவிடும் எனவும் பாதிக்கப்பட்ட அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...

1742213297 ganemulla sanjeewa 6
ஏனையவை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேக நபர்கள் டிசம்பர் 5 வரை விளக்கமறியல் நீட்டிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் 5ஆம்...

thumbs b c 5027e373e0f532f509cd40063f3ea6cb
ஏனையவை

லிபியா போலல்லாமல், இலங்கையின் பழமையான ஜனநாயகத்தைப் பேண வேண்டும்” – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தல்!

இலங்கை ஆசியாவின் மிகப் பழமையான ஜனநாயகம் மிக்க நாடு என்றும், லிபியா அல்லது தற்போது அமைதியின்மையை...

2024 11 25 Pudukkudiyiruppu MV 2
ஏனையவை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு: 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வரும்...