8 3
ஏனையவை

ட்ரம்பின் திட்டத்தால் இலங்கைக்கும் பேரிடி: வேலை பறிபோகும் அபாயத்தில் ஆயிரக்கணக்கானோர்!

Share

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) வெளிநாடுகளுக்கு வழங்கும் நிதியை முடக்க தீர்மானத்திருப்பது, இலங்கையின் அரச சாரா நிறுவனங்களை (NGO) நெருக்கடிக்குள் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவு காரணமாக இலங்கையில் 1000 இற்கும் மேற்பட்டோரின் வேலைகள் ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மனித உரிமைகள், நல்லாட்சி, பெண்கள் மற்றும் LGBTQ உரிமைகள் ஆகியவற்றில் பணிபுரியும் இலங்கையின் கணிசமான எண்ணிக்கையிலான அரசு சாரா நிறுவனங்கள் USAID ஆதரவுடன் செயற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்க நிதி நிறுத்தத்தைத் தொடர்ந்து அவ்வாறான பல நிறுவனங்கள் தங்கள் திட்டங்களைத் தக்க வைத்துக் கொள்ள போராடி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை, சர்வதேச மேம்பாட்டுத் திட்டங்களை விட உள்நாட்டு செலவினங்களுக்கு முன்னுரிமை அளிக்கும், “அமெரிக்காவின் முதல் விதி” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இவ்வாறனதொரு பின்னணியில், ட்ரம்பின் குறித்த திட்டமானது, கண்மூடித்தனமாக உள்ளது என்றும் இதன் காரணமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டியிருப்பதாகவும் தொடர்ந்தும் நிதி முடக்கம் தொடர்ந்தால் பல திட்டங்கள் சரிந்துவிடும் எனவும் பாதிக்கப்பட்ட அரசு சாரா நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...