8 31
ஏனையவை

இனவாதத்தைப் புறந்தள்ளிய வட மாகாண மக்கள்: டில்வின் சில்வா புகழாரம்

Share

இனவாதத்தைப் புறந்தள்ளிய வட மாகாண மக்கள்: டில்வின் சில்வா புகழாரம்

வடமாகாண மக்கள் பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாறாது, இனவாதத்தைப் புறந்தள்ளி எமக்கு வாக்களித்தமைக்கு விசேடமாக நன்றி தெரிவிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இன்றையதினம் (15.11.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “விகிதாசாரத் தேர்தலின் கீழ் தேசிய மக்கள் சக்தி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் அரசியல் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், வெற்றிக்காகத் தியாகம் செய்தவர்களுக்கு அனைவருக்கும் நன்றிகள்.

விசேடமாக பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாறாத வடமாகாண மக்கள், இனவாதத்தைப் புறந்தள்ளி எமக்கு வாக்களித்தமைக்கு நன்றிகளை தெரவித்துக்கொள்கிறேன்.

மக்கள் வழங்கிய பெரும்பான்மையான அதிகாரத்தை மக்களின் நன்மைக்காக அர்ப்பணித்து மக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்போம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...