24 6634f4d128e0e
இலங்கைஏனையவைசெய்திகள்

டுபாயிலிருந்து வரும் உத்தரவிற்கு கொழும்பில் செயற்படும் குற்றக்கும்பல்

Share

டுபாயிலிருந்து வரும் உத்தரவிற்கு கொழும்பில் செயற்படும் குற்றக்கும்பல்

பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (02) இரவு தெஹிவளை நடைபாதை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து 02 கிலோ 129 கிராம் கொக்கெய்ன், 22 கிராம் மண்டி, 08 கிராம் குஷ் மற்றும் 03 கிராம் ஹாஸ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபர் பாமன்கடை பகுதியில் உள்ள வீடொன்றினை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டு போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் துபாயில் இருந்து நடத்தப்பட்டதாக தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, திட்டமிட்ட குற்றவாளிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கையின் கீழ் மார்ச் 19 ஆம் திகதி முதல் நேற்று (02) வரை 804 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...