5 27
ஏனையவை

ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து: நாடாளுமன்றில் வெளியான சுற்றறிக்கை

Share

புதிய நாடாளுமன்றம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை ஒழுங்கமைக்க வேண்டியுள்ள நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை அனைத்து நாடாளுமன்ற ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ள நாடாளுமன்றத்தின் பணிப்பாளர் (நிர்வாகம்) இந்திரா திஸாநாயக்க, அந்த வாரத்தில் நாடாளுமன்ற ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில், புதிய நாடாளுமன்றத்தை நிறுவுவதற்கான பூர்வாங்க பணிகளுக்கு நாடாளுமன்றத்தின் அனைத்து பிரிவுகளும் தயார்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் படி, இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

10 ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

அதன் போது, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற முறை குறித்து விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

இதேவேளை, புதிய பாராளுமன்றத்திற்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
images 5
ஏனையவை

காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்: டிசம்பர் 30-இல் தேடல் தொடக்கம்!

காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கும் (பத்து ஆண்டுகள்) மேலாகியும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய வானூர்தியை (MH370) தேடும்...

images 4
ஏனையவை

தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்: 22 மாவட்டங்கள் அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிப்பு!

‘டித்வா’ சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள்...

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 02 டிசம்பர் 2025 : சுப பலன்கள் கிடைக்கும் ராசிகள்

இன்று டிசம்பர் 2, 2025 கார்த்திகை மாதம் 16ம் தேதி செவ்வாய் கிழமை, மேஷ ராசியில்...

Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...