14 11 2025
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

Share

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (21) முற்பகல் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் (SLMA) கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி, அரசாங்கம், மதத் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் என அனைத்துத் தரப்பினரும் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றினால் மட்டுமே நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியும் என அவர் வலியுறுத்தினார்.

இலங்கை ஒரு காலத்தில் சிறந்த பாரம்பரியத்தையும் வெற்றிகளையும் கொண்டிருந்த போதிலும், கடந்த சில தசாப்தங்களாகப் பல்வேறு துறைகளில் வீழ்ச்சியடைந்துள்ளது. இழந்த அந்தப் பெருமையையும் கௌரவத்தையும் மீண்டும் பெறுவதே தற்போதைய பிரதான இலக்காகும்.

சவால்களை எதிர்கொள்ளும்போது ஒரே நோக்கத்துடனும் உறுதியுடனும் செயற்படுவதன் மூலம், தாய்நாட்டை உலகில் மதிப்புமிக்க ஒரு நாடாக மாற்ற முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

புதிதாக விடுகை பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பாதுகாப்புப் படைகளுக்கு உள்ள முக்கிய பொறுப்பினை நினைவுபடுத்தினார்.

 

 

Share
தொடர்புடையது
Coconut Daily Ceylon
ஏனையவை

தேங்காய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: இடைத்தரகர்களைத் தவிர்த்து நேரடி விற்பனை!

நாட்டில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், வெளிச்சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான விலை உயர்வைக் கட்டுப்படுத்த தென்னை...

25 690723f808229
ஏனையவை

நைஜீரியாவில் ஐ.எஸ். குழுவினர் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல் – ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு!

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் இயங்கி வரும் ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதக் குழுவினருக்கு எதிராக அமெரிக்க இராணுவம்...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...