tamilni 256 scaled
ஏனையவை

கடனை அடைப்பதற்காக சுவிஸ் அருங்காட்சியகத்தில் கொள்ளையடித்த பிரித்தானிய சகோதரர்கள்…

Share

பிரித்தானிய சகோதரர்கள் இருவர், சுவிஸ் அருங்காட்சியகம் ஒன்றில் பல மில்லியன் மதிப்புள்ள கலைப்பொருட்களைக் கொள்ளையடித்து சிக்கிக்கொண்ட நிலையில், தங்கள் கடனை அடைப்பதற்காக தாங்கள் கொள்ளையடித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்கள்.

பிரித்தானிய சகோதரர்களான Stewart மற்றும் Louis Ahearne, 2019ஆம் ஆண்டு, மற்றொரு நபருடன் சேர்ந்து, ஜெனீவாவிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றில் கொள்ளையடித்துள்ளார்கள்.

கொள்ளையடித்த பொருட்களுடன் ஹொங்ஹொங் சென்ற சகோதரர்கள் இருவரும், தாங்கள் கொள்ளையடித்த ஒரு கலைப்பொருளை 80,000 பவுண்டுகளுக்கு விற்றுள்ளார்கள்.

சுவிஸ் பொலிசாரிடம் சிக்கிய சகோதரர்கள், நீதிமன்ற விசாரணையின்போது, தங்களுக்கு இருந்த கடனை அடைப்பதற்காகவே, தாங்கள் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

சகோதரர்களில் மூத்தவரான Stewart Ahearne (45) கூறும்போது, தன் தம்பியாகிய Louis Ahearne (34) கடனில் சிக்கியிருப்பதாகவும், அவரைத் தப்புவிக்க, சுவிட்சர்லாந்திலிருந்து ஒரு பொருளைக் கொள்ளையடிக்கவேண்டும் என்றும் தனக்கு வந்த தொலைபேசி அழைப்பில் ஒருவர் கூறியதாகவும், தன் தம்பியைக் காப்பாற்றவேண்டும் என உள்ளுணர்வு கூற, தான் அந்த கொள்ளையில் பங்கேற்றதாகவும் தெரிவிக்கிறார்.

தங்களுடன் கொள்ளைச் சம்பவத்தில் பங்கேற்ற அந்த மூன்றாவது நபரின் பெயரைக் கூறுவதை சகோதரர்கள் தவிர்க்கிறார்கள். அவர் மோசமான ஆள், அவர் கேட்டால் மறுக்கமுடியாது என்கிறார்கள் அவர்கள்.

வழக்கு விசாரணை தொடர்கிறது…

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...