3 25
ஏனையவை

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகங்கள் ஊடாக பிறப்பு இறப்பு சான்றிதழ்கள்

Share

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகங்கள் ஊடாக பிறப்பு இறப்பு சான்றிதழ்கள்

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கான, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளை, அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஊடாக வழங்கும் புதிய முயற்சியை அரசாங்கம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, குவைத், ஜப்பான் மற்றும் கட்டார், அவுஸ்திரேலிய – மெல்போர்ன் கனடா – டொராண்டோ, இத்தாலி – மிலன் மற்றும் டுபாய் தூதரகங்கள் என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு தூதரங்களில் இந்த திட்டம் ஒரு முன்னோடியாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்காக, இலங்கையில், பதிவாளர் நாயகம் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சினால் கூட்டாக நிர்வகிக்கப்படும் ‘e-BMD’ என்ற மின்னணு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு தரவுத்தள அமைப்பை, மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம், இலங்கை முழுவதும் உள்ள பிரதேச செயலக அலுவலகங்களில் சான்றிதழ்களைப் பெறுவதற்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாதிரியைப் பின்பற்றி, வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்க இந்த திட்டம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டத்தில், ஏற்கனவே ஸ்கேன் செய்யப்பட்டு இ-பிஎம்டி அமைப்பில் சேமிக்கப்பட்ட சுமார் 45 மில்லியன் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும்.

அத்துடன், 1960 ஜனவரி முதலாம் திகதி முதல் பதிவுசெய்யப்பட்ட பிறப்புகள், திருமணம் மற்றும் இறப்புகளுக்கான பதிவுகள் இதில் அடங்கும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...