3 25
ஏனையவை

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகங்கள் ஊடாக பிறப்பு இறப்பு சான்றிதழ்கள்

Share

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகங்கள் ஊடாக பிறப்பு இறப்பு சான்றிதழ்கள்

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கான, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளை, அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஊடாக வழங்கும் புதிய முயற்சியை அரசாங்கம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, குவைத், ஜப்பான் மற்றும் கட்டார், அவுஸ்திரேலிய – மெல்போர்ன் கனடா – டொராண்டோ, இத்தாலி – மிலன் மற்றும் டுபாய் தூதரகங்கள் என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு தூதரங்களில் இந்த திட்டம் ஒரு முன்னோடியாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்காக, இலங்கையில், பதிவாளர் நாயகம் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சினால் கூட்டாக நிர்வகிக்கப்படும் ‘e-BMD’ என்ற மின்னணு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு தரவுத்தள அமைப்பை, மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம், இலங்கை முழுவதும் உள்ள பிரதேச செயலக அலுவலகங்களில் சான்றிதழ்களைப் பெறுவதற்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாதிரியைப் பின்பற்றி, வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்க இந்த திட்டம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டத்தில், ஏற்கனவே ஸ்கேன் செய்யப்பட்டு இ-பிஎம்டி அமைப்பில் சேமிக்கப்பட்ட சுமார் 45 மில்லியன் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும்.

அத்துடன், 1960 ஜனவரி முதலாம் திகதி முதல் பதிவுசெய்யப்பட்ட பிறப்புகள், திருமணம் மற்றும் இறப்புகளுக்கான பதிவுகள் இதில் அடங்கும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...