3 25
ஏனையவை

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகங்கள் ஊடாக பிறப்பு இறப்பு சான்றிதழ்கள்

Share

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகங்கள் ஊடாக பிறப்பு இறப்பு சான்றிதழ்கள்

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கான, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளை, அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஊடாக வழங்கும் புதிய முயற்சியை அரசாங்கம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, குவைத், ஜப்பான் மற்றும் கட்டார், அவுஸ்திரேலிய – மெல்போர்ன் கனடா – டொராண்டோ, இத்தாலி – மிலன் மற்றும் டுபாய் தூதரகங்கள் என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு தூதரங்களில் இந்த திட்டம் ஒரு முன்னோடியாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்காக, இலங்கையில், பதிவாளர் நாயகம் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சினால் கூட்டாக நிர்வகிக்கப்படும் ‘e-BMD’ என்ற மின்னணு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு தரவுத்தள அமைப்பை, மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம், இலங்கை முழுவதும் உள்ள பிரதேச செயலக அலுவலகங்களில் சான்றிதழ்களைப் பெறுவதற்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாதிரியைப் பின்பற்றி, வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்க இந்த திட்டம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டத்தில், ஏற்கனவே ஸ்கேன் செய்யப்பட்டு இ-பிஎம்டி அமைப்பில் சேமிக்கப்பட்ட சுமார் 45 மில்லியன் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும்.

அத்துடன், 1960 ஜனவரி முதலாம் திகதி முதல் பதிவுசெய்யப்பட்ட பிறப்புகள், திருமணம் மற்றும் இறப்புகளுக்கான பதிவுகள் இதில் அடங்கும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...