3 25
ஏனையவை

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகங்கள் ஊடாக பிறப்பு இறப்பு சான்றிதழ்கள்

Share

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகங்கள் ஊடாக பிறப்பு இறப்பு சான்றிதழ்கள்

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கான, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளை, அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஊடாக வழங்கும் புதிய முயற்சியை அரசாங்கம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, குவைத், ஜப்பான் மற்றும் கட்டார், அவுஸ்திரேலிய – மெல்போர்ன் கனடா – டொராண்டோ, இத்தாலி – மிலன் மற்றும் டுபாய் தூதரகங்கள் என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு தூதரங்களில் இந்த திட்டம் ஒரு முன்னோடியாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்காக, இலங்கையில், பதிவாளர் நாயகம் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சினால் கூட்டாக நிர்வகிக்கப்படும் ‘e-BMD’ என்ற மின்னணு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு தரவுத்தள அமைப்பை, மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் மூலம், இலங்கை முழுவதும் உள்ள பிரதேச செயலக அலுவலகங்களில் சான்றிதழ்களைப் பெறுவதற்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாதிரியைப் பின்பற்றி, வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்க இந்த திட்டம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டத்தில், ஏற்கனவே ஸ்கேன் செய்யப்பட்டு இ-பிஎம்டி அமைப்பில் சேமிக்கப்பட்ட சுமார் 45 மில்லியன் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும்.

அத்துடன், 1960 ஜனவரி முதலாம் திகதி முதல் பதிவுசெய்யப்பட்ட பிறப்புகள், திருமணம் மற்றும் இறப்புகளுக்கான பதிவுகள் இதில் அடங்கும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Coconut Daily Ceylon
ஏனையவை

தேங்காய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: இடைத்தரகர்களைத் தவிர்த்து நேரடி விற்பனை!

நாட்டில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், வெளிச்சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான விலை உயர்வைக் கட்டுப்படுத்த தென்னை...

25 690723f808229
ஏனையவை

நைஜீரியாவில் ஐ.எஸ். குழுவினர் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல் – ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு!

நைஜீரியாவின் வடமேற்குப் பகுதியில் இயங்கி வரும் ஐ.எஸ். (ISIS) பயங்கரவாதக் குழுவினருக்கு எதிராக அமெரிக்க இராணுவம்...

14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...