2a7fc2b5 53043090909 8cdb1ae85c o 1 scaled
ஏனையவை

ரிஷி சுனக்கின் இடத்தைப் பிடிக்க திரைமறைவில் நடக்கும் வேலை

Share

ரிஷி சுனக்கின் இடத்தைப் பிடிக்க திரைமறைவில் நடக்கும் வேலை

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மவுசு குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், அவர் வரும் தேர்தலில் தோல்வியடைந்தால், அவரது இடத்துக்கான போட்டியில் 13 பேர் உள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.

2025இல் ரிஷி பிரதமராக இருக்கமாட்டார்
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தேர்தல் நடைபெறுமானால், அதற்குப் பின் ரிஷி பிரித்தானியாவின் பிரதமராக இருக்கமாட்டார் என நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

லேபர் கட்சி பிரித்தானியாவில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது.

அடுத்த பிரதமர் போட்டியில் 13 பேர்
இதற்கிடையில், ரிஷி சுனக்கின் இடத்தைப் பிடிக்க திரைமறைவில் வேலை நடப்பதாகவும், அவரது இடத்துக்கான போட்டியில் 13 பேர், அவரது கட்சியினரே, உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.

அவ்வகையில், ரிஷிக்கு பதிலாக பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் முதல் நபர், கெமி பேடனாக். கட்சியில் மிகவும் பிரபலமான அமைச்சர் அவர்தான் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அவருக்கு அடுத்தபடியாக அடிபடும் பெயர் லிஸ் ட்ரஸ். அவரைத் தொடர்ந்து, கடுமையான புலம்பெயர்தல் கொள்கைகள் கொண்டவரான உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேன் உள்ளார்.

அடுத்தடுத்த இடங்களில், வெளியுறவுச் செயலரான James Cleverly, Penny Mordaunt, Tom Tugendhat, Grant Shapps, Michael Gove, Priti Patel, Jacob Rees-Mogg, Gillian Keegan, Claire Coutinho, David Fros ஆகியோர் பெயரும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...