Untitled 1 1
இந்தியாஏனையவைசெய்திகள்

கண்ணாடி பாட்டில்களில் கண்டெடுக்கப்பட்ட சிசுக்களின் சடலங்கள்! அதிர்ச்சி சம்பவம்

Share

கண்ணாடி பாட்டில்களில் கலைக்கப்பட்ட 7 சிசுக்களின் சடலங்கள் கர்நாடகாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக்கரையில் நேற்று துணிகளை துவைக்க வந்த சிலர் அங்கு கிடந்த கண்ணாடி பாட்டில்களில் கலைக்கப்பட்ட சிசுக்களின் உடல்கள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் பொலிசாருக்கு உடனடி தகவல் அளித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் பாட்டில்களை கைப்பற்றி அவற்றை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் அவற்றை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்ப வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பொலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து எம்.எல்.ஏ. பாலச்சந்திர ஜர்கிஹோலி கூறுகையில், இதுபோன்ற நிகழ்வுகள் பொதுச் சமூகத்திற்கு பெருத்த அவமானம் என தெரிவித்தார்.

இச்சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 55
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்: கேரளத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்லத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ்...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled
செய்திகள்இந்தியா

இந்தியாவின் மாபெரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்: 30 இலட்சம் அதிகாரிகள் களமிறக்கம்!

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், ஒவ்வொரு தனிநபரையும் கணக்கெடுக்கும் பத்தாண்டுக்கு ஒருமுறை நடைபெறும்...

Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...