13 23
ஏனையவை

காசா போர் தொடர்பில் குரல் கொடுத்த கிரிக்கெட் பிரபலம்

Share

காசா போர் தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா(Usman Khawaja) உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

காசாவில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்காக அவர் இவ்வாறு குரல் கொடுத்துள்ளார்.

காசாவில் இடம்பெற்று வரும் தீவிர போரை நிறுத்துமாறு யுனிசெப் நிறுவனம் விடுத்துள்ள கோரிக்கைக்கு செவி சாய்க்குமாறே கோரியுள்ளார்.

உஸ்மான் காவாஜா தனது சமூக ஊடகப் பதிவில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உலகின் மிகவும் நம்பகமானதும் மதிப்பிற்குரிதுமான சிறுவர் நல தொண்டு நிறுவனங்களில் ஒன்றான யுனிசெப் நிறுவனம் விடுத்துள்ள கோரிக்கைக்கு செவி சாய்க்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு வார காலத்தில் 45 சிறுவர்கள் உள்ளிட்ட 450 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்படாத ஒவ்வொரு மணித்தியாலத்திலும் உயிரிழப்புக்கள் பதிவாகி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே தனது பேச்சை கேட்காவிட்டாலும், யுனிசெப்பின் கோரிக்கையை ஏற்குமாறு தொடர்புடைய தரப்பிடம் உஸ்மான் கவாஜா கோரியுள்ளார்.

உலகின் அனைத்து உயிர்களும் சமமானவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...