1 59
ஏனையவை

வடக்கில் விடுவிக்கப்பட்ட இராணுவ முகாம்: அநுரவை எச்சரிக்கும் நாமல்

Share

வடக்கில் விடுவிக்கப்பட்ட இராணுவ முகாம்: அநுரவை எச்சரிக்கும் நாமல்

இராணுவ முகாம்களை விடுவிப்பதில் வட மாகாணமாக இருந்தாலும் தென் மாகாணமாக இருந்தாலும் தேசிய பாதுகாப்பு பேணப்படுவது மிகவும் முக்கியமானது என நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

வடக்கில் இராணுவ முகாமொன்று விடுவிக்கப்பட்டமை குறித்து இன்று (20) தனது எக்ஸ்(X) பக்கத்தில் இட்ட பதிவொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கில் இராணுவ முகாம் ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு காணிகளை வழங்குவதற்காக இன்னும் பல இராணுவ முகாம்கள் எதிர்வரும் மாதங்களில் விடுவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு தரப்பினருடன் கலந்தாலோசித்து காணிகளை விடுவிப்பது பிரச்சினையல்ல என்றாலும், தேசிய பாதுகாப்பில் சமரசம் செய்யும் வகையில் அதனை செய்யக்கூடாது.

30 ஆண்டுகால பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடிய இலங்கை இன்று ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திரத்தை அனுபவிக்கிறது.

எனவே வட மாகாணமாக இருந்தாலும் தென் மாகாணமாக இருந்தாலும் தேசிய பாதுகாப்பு பேணப்படுவது மிகவும் முக்கியமானது.“ என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...